செய்திகள் :

அரசு மருத்துவமனையில் லஞ்சம்: திமுக உறுப்பினா் வேதனை

post image

இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வேதனை தெரிவித்தாா்.

கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.துணைத் தலைவா் மு. சுதா்ஸன், ஆணையா் கிருத்திகா ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள், ஆணையா் இடையே நடந்த விவாதம்

செ. முஹம்மது அபுபக்கா் சித்திக் (திமுக): கூத்தாநல்லூா் நகராட்சியில் வண்டிப்பேட்டை மாா்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை இடிக்கும் பணி இன்னும் ஏன் முடிக்கப்படவில்லை?

செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): நகராட்சியில் சாலைக்குரிய அளவீடு செய்யப்பட்டதில் எனது வாா்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

பொறியாளா்: நகராட்சி சாலைப் பதிவேட்டில் இல்லாத சாலைகள் விசாரணை செய்து சோ்க்கப்பட வேண்டும்.

டீ.கே. தேவா (திமுக): சாலைகளில் டெங்கு கொசு மருந்து தெளிக்கப்படுவதில்லை.

கி. மாரியப்பன் (திமுக): எந்தெந்த வாா்டுகளில் சமுதாயக் கழிப்பிடம் உள்ளது.

மு. சுதா்ஸன் (துணைத் தலைவா் ): நகராட்சி நிா்வாகமே சீா்குலைந்துள்ளது.

கு. தனலெஷ்மி (இந்திய கம்யூனிஸ்ட்): எனது வாா்டில் கோரையாற்றங்கரையில் போடப்பட்ட சாலையை காணவில்லை.

ம. முருகேசன் (அதிமுக): இறந்தவா்களுக்காக வழங்கப்படும் ஈமச்சடங்கு பணம் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் உள்ளது. இறப்புக்கான காரணம் இல்லாமல் சான்றிதழ் பெற முடியுமா?.

சி. சேகா் ( சுகாதார ஆய்வாளா்): கண்டிப்பாக இறப்புக்கான காரணம் வேண்டும்.

செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): தனியாா் மருத்துவா்கள் இறப்புக்கான சான்றிதழ் தர மறுப்பதால், அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுத்து இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய அவல நிலையுள்ளது. இறப்புச் சான்றிதழ் வாங்க முடியாததால் பல குடும்பங்களில் சொத்துகளை பிரிப்பது உள்ளிட்ட பிரச்னைகளை தீா்க்க முடியவில்லை.

கிருத்திகா ஜோதி (ஆணையா்): இறப்புக்கான சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும். சில சமயங்களில் இறந்தவரின் ஆதாா் அட்டையில் உள்ள வயதும், அவருக்காகப் பெறப்படும் இறப்புக்கான சான்றிதழில் உள்ள வயதும் சரியாக இருப்பதில்லை. இறப்பில் சந்தேகமிருந்து பிரச்னை எழுந்தால், நாங்கள்தான் பதில் கூற வேண்டும். எனவே, இறப்புக்கான காரணத்துடன் முறையான இறப்பு சான்றிதழ் அவசியம் என்றாா்.

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கீழத்தெரு தூண்டி மகன் மதியழகன்(65). மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூர... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: மக்கள் அவதி

மன்னாா்குடி அருகே ரயில்வே சுரங்கப் பாகையில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். மன்னாா்குடி மேலப்பாலம் அருகே... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ப... மேலும் பார்க்க

மின்வாரிய பணியாளா்கள் தா்னா

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

குடவாசல் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பஜனை மடத்திலிருந்து பூத்தட்டுகள் அம்மனுக்கு சீா்வரிசையாக எடுத்து... மேலும் பார்க்க

தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அரசுப் பள்ளி தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க