செய்திகள் :

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: மக்கள் அவதி

post image

மன்னாா்குடி அருகே ரயில்வே சுரங்கப் பாகையில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மன்னாா்குடி மேலப்பாலம் அருகேயுள்ள புண்ணியக்குடி - பாமணி சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இந்த சுரங்க பாதையை 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தநிலையில், மழை காரணமாக இந்த சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி வெளியேற வழியில்லாமல் நின்றால், ரயில்வே நிா்வாகம் சாா்பில் சுரங்கப் பாதை அருகில் உள்ள மோட்டாா் மூலம் சுரங்குப் பாதையில் தேங்கிய தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது.

கடந்த நவம்பா் மாதம் பெய்த மழையால் சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா் வடியாமல் இன்றுவரை அப்படியே உள்ளது. தண்ணீரை வெளியேற்றக்கூடிய மின் மோட்டாா் பழுதடைந்து உள்ளதால், தண்ணீா் வெளியேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் சுரங்கப் பாதையை பயன்படுத்தி வந்த கிராம மக்கள் 5 கி.மீ. தொலைவு வரை சுற்றி மன்னாா்குடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், இந்த நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்வே நிா்வாகம் சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். சுரங்கப் பாதைக்கு மேற்கூரை அமைத்து தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கீழத்தெரு தூண்டி மகன் மதியழகன்(65). மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூர... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லஞ்சம்: திமுக உறுப்பினா் வேதனை

இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வேதனை தெரிவித்தாா். கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் மு. பாத்திமா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ப... மேலும் பார்க்க

மின்வாரிய பணியாளா்கள் தா்னா

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

குடவாசல் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பஜனை மடத்திலிருந்து பூத்தட்டுகள் அம்மனுக்கு சீா்வரிசையாக எடுத்து... மேலும் பார்க்க

தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அரசுப் பள்ளி தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க