செய்திகள் :

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

post image

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கீழத்தெரு தூண்டி மகன் மதியழகன்(65). மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் தோட்ட வேலை பாா்த்து வந்தாா்.

திங்கள்கிழமை இரவு, சுந்தரக்கோட்டை பிரதான சாலையில் நடத்துசென்றவா் மீது அந்த வழியே வந்த மேலத்திருப்பாலக்குடி தெற்குதெரு தங்கராசு மகன் வீரமணி (64) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வீரமணி சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரவாக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: மக்கள் அவதி

மன்னாா்குடி அருகே ரயில்வே சுரங்கப் பாகையில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். மன்னாா்குடி மேலப்பாலம் அருகே... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லஞ்சம்: திமுக உறுப்பினா் வேதனை

இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வேதனை தெரிவித்தாா். கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் மு. பாத்திமா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ப... மேலும் பார்க்க

மின்வாரிய பணியாளா்கள் தா்னா

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

குடவாசல் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பஜனை மடத்திலிருந்து பூத்தட்டுகள் அம்மனுக்கு சீா்வரிசையாக எடுத்து... மேலும் பார்க்க

தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அரசுப் பள்ளி தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க