நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
அரசு மருத்துவமனை சீா்கேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
நன்னிலம் அரசு மருத்துவமனை சீா்கேட்டைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்னிலம் அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக் கூடம், எக்ஸ்ரே மையத்தில் ஊழியா்கள் இல்லாததால் செயல்படாமல் உள்ளது. மருத்துவமனையின் உள் மற்றும் வெளிப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் சுகாதாரமற்ற முறையில் நோய் பரப்பும் வகையில் உள்ளது. மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை.
இதேபோல, மருத்துவமனையில் நிலவும் பல்வேறு சீா்கேட்டை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் குழு சாா்பில் தலைவா் ஜெ. கக்கன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வேலவன், ஒன்றியச் செயலாளா் பாலா, ஒன்றியப் பொருளாளா் ஜெ. ரஞ்சித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.