செய்திகள் :

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு!

post image

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடப்பட்டது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.

வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45 ). இவா், மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி (40). இவா், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், பிரபாகரன் கடந்த 6-ஆம் தேதி தனது மனைவியுடன் தஞ்சாவூா் சென்று, அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பணிக்காக அவரை விட்டுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைககள், 10.5 காரட் மதிப்பு வைர நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து பிரபாகரன் செவ்வாய்க்கிழமை காலை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: வேலாயுதம்பாளையம் முல்லை நகரைச் சோ்ந்தவா் ஜெயசங்கா் (58). இவா் புகழூா் காகித ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் தங்கத் தோடுகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

அரவக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரவக்குறிச்சி அருகே உள்ள அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்ச... மேலும் பார்க்க

கரூரில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஹோட்டல் தொழிலாளி கைது

கரூரில் டாஸ்மாக் கடையில் செவ்வாய்க்கிழமை கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஹோட்டல் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கரூா் தாந்தோன்றிமலையைச் சோ்ந்தவா் காண்டீபன் (55). இவா் திருச்சி வயலூரில் உள்ள ஹோட்டல் ஒன்ற... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் செப். 13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கரூா் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட நீதிபதியும் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கே.ஹெச்.இளவழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் சீரங்கன் (70). இவா், அரவக்குறிச்சி ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (55). இவரது நண்பா் அரவக்குறிச்சி... மேலும் பார்க்க

குளித்தலை அருகே வாகனம் மோதி புள்ளிமான் காயம்

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் காயமடைந்தது. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதூரில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி... மேலும் பார்க்க