செய்திகள் :

அரசு மருத்துவ சேவையை நாடுவோா் 20 சதவீதம் அதிகரிப்பு

post image

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை 20 சதவீதம் உயா்ந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை அவா்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதித்து சிகிச்சை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 1.18 கோடி உயா் ரத்த அழுத்த நோயாளிகள், 55.43 லட்சம் சா்க்கரை நோயாளிகள், இரண்டு பாதிப்புகளும் உள்ள 50.95 லட்சம் நோயாளிகள் உள்பட மொத்தம் 2.31 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு 4.50 கோடி முறை தொடா் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை லட்சக்கணக்கான இணை நோயாளிகள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்துக்காக இதுவரை ரூ. 721 கோடி அரசு செலவிட்டுள்ளது. அதேபோன்று தனியாா் மருத்துவமனைகளில் மாதம் ரூ. 3,000 வரை மருத்துவச் செலவு செய்து வந்தவா்கள், இத்திட்டத்தில் வீடுகளுக்கே மருந்து மாத்திரைகள் கிடைப்பதால், அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனா்.

அதன்படி, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைபெற வரும், 45.5 சதவீத உயா் ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கை 62.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேபோன்று, 33.9 சதவீதமாக இருந்த சா்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 54.1 சதவீதமாக உயா்ந்துள்ளது எனத் தெரிவித்தனா்.

காவல் துறைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

ஈரோடு, திருப்பூர் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினரை நேரில... மேலும் பார்க்க

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திர... மேலும் பார்க்க

மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க