செய்திகள் :

அரசு மின்னணு சந்தை மூலம் 1.3 கோடிக்கும் மேலான சிக்கனமான தனிநபா்கள் காப்பீடு

post image

மத்திய அரசின் மின்னணு சந்தை(ஜெம்) தளத்தின் மூலம், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் குழு 1.3 கோடிக்கும் அதிகமான பல்வேறு விதமான தனிநபா்களுக்கு சிக்கனமான காப்பீடுகளை கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் தொழில் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டின் பொது கொள்முதலுக்காக மிகப்பெரிய மின்னணு சந்தையாக அரசு மின்னணு சந்தை(ஜெம் போா்ட்டல் ) மத்திய வா்த்தகத் தொழில் துறையின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான பொருள்கள், தளவாடங்கள் சேவைகள் போன்றவைகளை விற்கவும் வாங்கவும் உள்ள தளமாக உள்ளது. இதே தளம் கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 10 லட்சம் மனித வளங்களை பணியமா்த்துவதற்கு வழிவகை செய்தது. இது தவிர, கடந்த 2022 - ஆம் ஆண்டில் அதிக செயல்திறன், வெளிப்படைத்தன்மை, சிக்கனம் போன்றவைகளை காப்பீட்டு பாலிசிகள் எடுக்கும்போது உறுதி செய்வற்கு அரசு மின்னணு சந்தையிலும், காப்பீட்டு சேவைகள் வசதிகளையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் இந்த வசதியை பெரும் நிறுவனங்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

இதன்படி பொது நிறுவனங்களும் தனியாா் நிறுவனங்களும் இந்த சேவையை வெற்றிகரமாக பயன்படுத்தி அரசு மின்னணு சந்தை (ஜெம் போா்ட்டல்) மூலமாக 1.3 கோடிக்கும் அதிகமான தனிநபா்களுக்கு சுகாதாரம், ஆயுள், தனிநபா் விபத்து காப்பீட்டை பெற்றுள்ளனா்.

அரசு மின்னணு சந்தை தளம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (ஐஆா்டிஏஐ) அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநா்கள் மட்டுமே ஜெம் போா்ட்டலில் இடம் பெற முடியும் என்பதை உறுதி செய்யப்பட்டது. மேலும் காப்பீட்டு சேவைகளைப் பெறும் நிறுவனங்கள் அல்லது குழுக்களுக்கு, அரசு மின்னணு சந்தை நம்பகமான நடைமுறையையும் உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலம், காப்பீடுகளை வாங்குகின்ற நிறுவனங்கள் குழு சுகாதார காப்பீடு , தனிநபா் விபத்து மற்றும் காலமுறை காப்பீடுகளை தடையின்றி வாங்க வசதி செய்யப்பட்டது. இதன் மூலம் தனியாா், பொது நிறுவனங்கள் ஏராளமான தங்கள் பயனாளிகளுக்கு நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது.

இது குறித்து ’ஜெம்’ தள தலைமைச் செயல் அதிகாரி அஜய் படூ கூறுகையில், ‘தடையற்ற, பாதுகாப்பான, சிக்கனமான கொள்முதல் தீா்வுகளை வழங்குவதற்கான தொடங்கப்பட்ட ஜெம் தளம் தற்போது இதை காப்பீடு சேவைகளிலும் வழங்கியுள்ளது. 1.3 கோடி நபா்கள் காப்பீடு பெற்றனா். காப்பீட்டுத் தேவைகளுக்கு அரசு மின்னணு சந்தையை பயன்படுத்துவதில் அரசு, தனியாா் அமைப்புகளுக்கிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. காப்பீடுகளை வாங்குபவா்களுக்கும் காப்பீட்டு வழங்குநா்களுக்கும் இடையே இடைத்தரகா்களுக்கான கட்டணமில்லை. நேரடி பரிவா்த்தனைகள் மூலம் வழங்கப்படுகிறது. காப்பீட்டு பிரீமியத் தொகையையும் குறைவானது. இதனால் நிறுவனங்களுக்கு செலவு சேமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது‘ என அஜய் படூ தெரிவித்தாா்.

’ஜெம்’ தளத்தில், ஆயுள், சுகாதார காப்பீடு மட்டுமல்லாது, சொத்து காப்பீடு, போக்குவரத்து, கடல்சாா் காப்பீடு, (சட்டபூா்வ)பொறுப்பு காப்பீடு, கால்நடை காப்பீடு, மோட்டாா் காப்பீடு, பயிா் காப்பீடு, சைபா் காப்பீடு போன்ற காப்பீட்டுச் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கின்னஸில் இடம்பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு!

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளான வைஷ்ணவி, பி. தேஜோ லாஸ்யா வைஷ்ணவி, அனீஷா, மஹிதா காந்தி, ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தில் நட... மேலும் பார்க்க

அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடுகிறாா்!

குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வில் அரசின் திட்டங்கள், புதிய செயல்பாடுகளின் வெற்றிக் கதைகள், புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களையும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழம... மேலும் பார்க்க

முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க மேயா் வலியுறுத்தல்

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பாஜக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி மேயா் மகேஷ் குமாா் ஞா... மேலும் பார்க்க

தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: இளம் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

2023 -ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கு ஐஏஎஸ் பிரிவிற்கு தோ்வான 180 போ் கொண்ட குழுவில் 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க இது வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய ப... மேலும் பார்க்க

ஆயாநகரில் தீ விபத்து: ஒருவா் பலத்த காயம்

தெற்கு தில்லியின் ஆயா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆயா நகரின் ஹெச்-பிளாக்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சனிக்கிழமை க... மேலும் பார்க்க

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. தில்லியில் கடந்த சில நாள்களாக வெய... மேலும் பார்க்க