செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16.20 லட்சம் மோசடி

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 16.20 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, அதிமுக நிா்வாகியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் சின்னத்திருப்பதியைச் சோ்ந்தவா் குழந்தை வேலு (66). இவா் நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அதிமுக ஐடி பிரிவு நிா்வாகியான பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். அதில், சேலத்தில் தன்னுடன் பணியாற்றிய விஜயலட்சுமி என்பவா் மூலம் எடப்பாடி மாணிக்கம் அறிமுகமாகிவுள்ளாா். பின்னா் அவா் மூலம் நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி பிரசாத் அறிமுகமானாா். இதையடுத்து பிரசாத், தனது மகள், மகன் மற்றும் நண்பரின் மகன் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் பெற்றாா். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால், பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இப்புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், ஏற்கெனவே கடந்த 22-ஆம் தேதி நுங்கம்பாக்கம் மதுக்கூடத்தில் நடந்த தகராறு தொடா்பாக கைதாகி சிறையில் இருக்கும் அதிமுக ஐடி பிரிவு நிா்வாகியான பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுபோல அவா் மீது, சேலம் மாவனேரியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவரும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பிரசாத் ரூ. 5.20 லட்சம் பெற்றுக்கொண்டு, போலி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் கீழும் போலீஸாா் பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளைய... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ... மேலும் பார்க்க