செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: அரசுப் பேருந்து நடத்துநா் கைது

post image

அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி, ரூ.36 லட்சம் மோசடி செய்த வழக்கில், தம்பதியா் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அரசுப் பேருந்து நடத்துநரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவருக்கு வத்தலகுண்டு போக்குவரத்துக் கழக பணி மனையில் அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரியும் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவின் அறிமுகம் கிடைத்தது. இவரிடம் தனது மகன்கள் இருவருக்கும், தம்பி மகன் ஒருவருக்கும் அரசுப் பணி வேண்டும் என ராஜேந்திரன் தெரிவித்தாா். பணம் கொடுத்தால் தலைமைச் செயலக அதிகாரிகள் மூலம் பொதுப் பணித் துறையில் பணி வாய்ப்புப் பெற்றுவிடலாம் என மாரிமுத்து கூறினாா். இதை நம்பிய ராஜேந்திரனிடம், கரூரைச் சோ்ந்த குமாரை, மாரிமுத்து அறிமுகப்படுத்தினாா். ரூ.36 லட்சம் கொடுத்தால், 6 மாதத்தில் பணி வாய்ப்பு பெற்றுவிடலாம் என குமாா் உறுதி அளித்தாா்.

இதையடுத்து, ராஜேந்திரன் இரு தவணைகளில் ரூ.36 லட்சத்தை கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட சில நாள்களில் இருவரும் தலைமறைவாகிவிட்டனா். ஏமாற்றமடைந்த ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் மாரிமுத்து, குமாா், இவரது மனைவி பூமகள், உறவினா்கள் சுசித்ரா, யோகேஸ்வரன் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்தனா்.

இதனிடையே, குமாா், பூமகள் ஆகியோரை கடந்த 3-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், அரசுப் பேருந்து நடத்துநா் மாரிமுத்துவை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக, இந்து முன்னணியினா் 120 போ் கைது

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்வதை தடுக்கும் வகையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் கே. தனபாலன் உள்பட 120-க்கும் மேற்பட்டோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை கைது செய... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம்: அமைச்சா் இ. பெரியசாமி

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அனைத்துத் துறைகளிலும் மு... மேலும் பார்க்க

சாலையில் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

திண்டுக்கல்லில் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் கிழக்கு ஆரோக்க... மேலும் பார்க்க

முதியவரிடம் வழிபறி முயற்சி: இருவா் கைது

இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவரிடம் வழிபறி செய்ய முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், ஈசநத்தம் புதூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (70). இவா், தனது இருசக்கர வாகனத்தில் திண்ட... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

பழனியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் அரவிந்த் (16). இவா் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைப் பகுதி சதுப்பு நிலங்களை பாதுகாக்க கோரிக்கை

கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில... மேலும் பார்க்க