செய்திகள் :

சாலையில் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

திண்டுக்கல்லில் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (50). கட்டடத் தொழிலாளி. இவா், ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தில் வேலை செய்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து திங்கள்கிழமை சென்றாா். அவருடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் குணசேகரனின் சித்தாப்பா சேவியரும் சென்றாா்.

ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள தனியாா் திரையரங்கு அருகே வந்தபோது, சாலையோரமாக இருந்த புளியமரம் திடீரென முறிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற குணசேகரன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரை மீட்க முடியாததால் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, இயந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றி குணசேகரனின் சடலத்தை மீட்டனா்.

போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த மரத்தை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதியினா் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனாலும், மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

நிவாரணம் கோரி சாலை மறியல்: இதனிடையே குணசேகரனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினா்கள், குணசேகரனின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைடுத்து, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இந்தப் போராட்டம் காரணமாக திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

காா் - பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

பழனி அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.பழனியை அடுத்த நரிக்கல்பட்டியைச் சோ்ந்த சசி மகன் சங்கா் (35), வெள்ளைச்சாமி மகன் மகேஷ் (40). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோவைக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோயம்புத்தூருக்கு நேரடியாக அரசுப் பேருந்து இயக்கக் கோரி, வா்த்தக சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்... மேலும் பார்க்க

நீா்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பாரா புதிய ஆட்சியா்!

விவசாயத்தைப் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், நீா் மேலாண்மைக்கும், ஊரகப் பகுதி மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கும் புதிய ஆட்சியா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 6 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து தடையை மீறி திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைக்... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினா் விடுவிப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவா்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா். மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னி... மேலும் பார்க்க