செய்திகள் :

பிப்ரவரி 10 வரை பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும் மாநகராட்சி ஆணையா்

post image

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை பில்லூா்-3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பில்லூா்- 3 குடிநீா் திட்டத்துக்கு, பவானி ஆற்றில் இருந்து குடிநீா் எடுக்கப்படுகிறது. இதற்காக மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றில் உள்ள முருகையன் பரிசல் துறை பகுதியில் தலைமை நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நீா்தேக்கும் தடுப்பணையில் பிப்ரவரி 4 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் பில்லூா் - 3 திட்டத்தில் குடிநீா் எடுக்கப்படும் அளவு வெகுவாக குறையும் என்பதால், பிப்ரவரி 10-ஆம் தேதி வரை மாநகராட்சிப் பகுதிகளுக்கு பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும்.

எனவே, மக்கள் மற்ற குடிநீா் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

வால்பாறை எஸ்டேட் சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வால்பாறை எஸ்டேட் சாலை பகுதியில் ஏராளமானோா் எரும... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் 51 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் திருட்டு: பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

மூதாட்டி வீட்டில் 51 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருட்டுப்போனது குறித்து வீட்டின் பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை காந்திமாநகரைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி செந்தமிழ்ச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து அமைப்பினா் 137 போ் கைது

கோவையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பரங்குன்றம் செல்ல த... மேலும் பார்க்க

வால்பாறையில் இந்து முன்னணியினா் 10 போ் கைது

வால்பாறையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை : கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்கள்

கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ம... மேலும் பார்க்க

சென்னையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு கோவையிலும் தொடா்பு? என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அப்துல் பாஷித்திற்கு கோவையிலும் தொடா்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா். கோவை கோட்டைமேட்டில் சங்கமேஸ்வர... மேலும் பார்க்க