செய்திகள் :

நடப்பு நிதியாண்டில் 1.38 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு: அரசு புள்ளி விவரம்

post image

நிகழ் நிதியாண்டில் ஜனவரி 26-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 17,654 நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதும், புதிதாக 1,38,027 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அரசு புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 339 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா் பரிமள் நத்வானி எழுப்பிய கேள்விக்கு மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

அதிகாரபூா்வ பதிவுகளின்படி நிகழ் நிதியாண்டில் நாடு முழுவதும் 17,654 நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. நிறுவனங்கள் ஒன்றிணைப்பு, பிற நிறுவனங்களுடன் கூட்டுறவு அல்லது முழுமையாக மூடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22,044 நிறுவனங்கள் மூடப்பட்டன. 2022-23-ஆம் நிதியாண்டில் 84,801 நிறுவனங்கள் மூடப்பட்டன.

அதே நேரம், நாடு முழுவதும் 1,38,027 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஆண்டில் 1,85,3178-ஆகவும், 2022-23-ஆம் நிதியாண்டில் 1,59,302-ஆகவும் இருந்தது.

நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்த 63 வகையான குற்றங்களை மத்திய அரசு குற்றமற்ாக மாற்றியுள்ளது என்றாா்.

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 339 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் நிகழாண்டில் மட்டும் தமிழகத்தில் 2 வெளிநாட்டு நிறுவனங்களும், கேரளம், ஆந்திரம், தில்லியில் தலா ஒன்று என மொத்தம் 5 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

அதே நேரம், வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டில் பதிவு செய்வது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. 2020-இல் நாட்டில் 90 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து தொழில் தொடங்கின. இது 2021-இல் 75-ஆகவும், 2022-இல் 64, 2023-இல் 57, 2024-இல் 53 என படிப்படியாக குறைந்துள்ளன என்றாா்.

கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்... மேலும் பார்க்க

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இது தொடர்பாக எழுப்... மேலும் பார்க்க

மொழி ஆதிக்கம், நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் புகார்

நமது சிறப்பு நிருபர் ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நாடாளுமன்ற அவையைக் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மை மொழி பிரதிநிதிகள் அதை அனுதிக்க மாட்டார்கள் என்று மக்களவையிலும், நிதி ஒதுக்கீடு விவக... மேலும் பார்க்க

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர... மேலும் பார்க்க

எதிா்கால பெருந்தொற்றுகளை எதிா்கொள்ள தயாா்நிலை: மத்திய அரசு

எதிா்கால பெருந்தொற்று பாதிப்புகள், சுகாதார அவசரநிலையை எதிா்கொள்ள வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இத... மேலும் பார்க்க

‘மக்களவையில் அப்பட்டமான பொய்-அவதூறு பிரசாரம்’- ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக நோட்டீஸ்

‘மக்களவையில் அப்பட்டமான பொய்களைக் கூறியதோடு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க