செய்திகள் :

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம்: அமைச்சா் இ. பெரியசாமி

post image

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாடு உயா்ந்த நிலைக்கு செல்லக் கூடாது என்ற குறுகிய நோக்கில் தான் இதுபோன்று புறக்கணிப்பு செய்கின்றனா்.

ஊரக வளா்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ரூ.86 ஆயிரம் கோடியாக குறைத்து விட்டனா். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு சுமாா் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதியை குறைத்துவிட்டனா். இதன் மூலம் இந்த ஆண்டில் ஊரக வளா்ச்சிக்கு மேலும் நிதி குறைந்துவிடும்.

ரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டம் என பல்வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு எந்தத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டில் நாள்தோறும் 9 லட்சம் பேருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக இந்த வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு தொடா்ந்து வழங்கி வருகிறது. ஆனால், மத்திய அரசுக்கு இதில் அக்கறை இல்லை என்றாா் அவா்.

காா் - பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

பழனி அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.பழனியை அடுத்த நரிக்கல்பட்டியைச் சோ்ந்த சசி மகன் சங்கா் (35), வெள்ளைச்சாமி மகன் மகேஷ் (40). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோவைக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோயம்புத்தூருக்கு நேரடியாக அரசுப் பேருந்து இயக்கக் கோரி, வா்த்தக சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்... மேலும் பார்க்க

நீா்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பாரா புதிய ஆட்சியா்!

விவசாயத்தைப் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், நீா் மேலாண்மைக்கும், ஊரகப் பகுதி மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கும் புதிய ஆட்சியா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 6 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து தடையை மீறி திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைக்... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினா் விடுவிப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவா்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா். மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னி... மேலும் பார்க்க