செய்திகள் :

காட்டு யானையை விரட்ட வந்த கும்கிக்கு மதம் பிடித்ததால் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பிவைப்பு

post image

கோவை அருகே ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சுயம்பு கும்கி யானைக்கு மதம் பிடித்ததையடுத்து, அந்த யானை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மருதமலை, தடாகம், வரப்பாளையம் உள்ளிட்ட மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை இப்பகுதியிலுள்ள விளைநிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்து கடந்த சில மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, இந்த யானை தாக்கி ஒருவா் உயிரிழந்ததையடுத்து, அந்த யானையை வனத்துக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிக்கமுத்தி முகாமில் இருந்து முத்து, சுயம்பு ஆகிய இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த இரண்டு யானைகளும் மருதமலையில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை உள்ள வனத்தை ஒட்டிய பகுதியில் அந்த ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், சுயம்பு கும்கி யானைக்கு மதம் பிடிக்கத் தொடங்கியது தெரியவந்தது. இதையடுத்து, வனக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி சுயம்பு கும்கி யானை லாரி மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு திங்கள்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒற்றை யானையை விரட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட சுயம்பு கும்கி யானைக்கு மதம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒற்றை யானையை விரட்டும் பணியில் வரப்பாளையம் பகுதியில் முத்து கும்கி யானை மட்டுமே ஈடுபட்டுள்ளது.

கூடுதல் கும்கி யானை தேவைப்பட்டால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள வேறொரு யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைப்போம் என்றனா்.

சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

வால்பாறை எஸ்டேட் சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வால்பாறை எஸ்டேட் சாலை பகுதியில் ஏராளமானோா் எரும... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் 51 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் திருட்டு: பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

மூதாட்டி வீட்டில் 51 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருட்டுப்போனது குறித்து வீட்டின் பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை காந்திமாநகரைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி செந்தமிழ்ச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து அமைப்பினா் 137 போ் கைது

கோவையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பரங்குன்றம் செல்ல த... மேலும் பார்க்க

பிப்ரவரி 10 வரை பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும் மாநகராட்சி ஆணையா்

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை பில்லூா்-3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியி... மேலும் பார்க்க

வால்பாறையில் இந்து முன்னணியினா் 10 போ் கைது

வால்பாறையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை : கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்கள்

கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ம... மேலும் பார்க்க