செய்திகள் :

சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு- நீதிபதி அரங்க. மகாதேவன் புகழாரம்

post image

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்காக ஓர்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அண்மையில் நடைபெற்ற சிவபூமி திருக்குறள் வளாக திறப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது: 25 ஆண்டுகளைத் தொட்டு நிற்கக்கூடிய சிவபூமி அறக்கட்டளை, யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்கான ஓர் அற்புதமான அரங்கை திறந்துள்ளது.

உலகத்துக்கே ஞானத்தை வழங்கிய ஒரு மொழி உண்டு என்றால் அது தமிழ் மொழிதான். திருக்குறளுக்காக ஓர் அற்புதமான அரங்கை நிர்ணயித்து, இந்த மண் உலகத்துக்கே ஓர் உன்னதமான மண்ணாக வருங்காலங்களில் அறியப்படும் என்பதை சிவபூமி அறக்கட்டளை நிறுவியுள்ளது; இந்த நாள் ஓர் ஆகச் சிறந்த நாளாகும் என்றார் நீதிபதி அரங்க. மகாதேவன்.

முன்னதாக, சிவபூமி அறக்கட்டளைக்கு நீதிபதி அரங்க. மகாதேவன் ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

இந்த நிகழ்வில் சிவபூமிஅறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், இந்திய துணைத் தூதர் (யாழ்ப்பாணம்) சாய் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபர்செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் ச... மேலும் பார்க்க

பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்

திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா ... மேலும் பார்க்க

வைகோ முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை

சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலா் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை கே.கே. நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும்’

தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (பிப். 5, 6) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங... மேலும் பார்க்க

மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் எச்சரிக்கை

நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்தாா். பொதுவாகவே 5 மி.மீ.க்கும் குறைவான அனைத்து வகைய... மேலும் பார்க்க