செய்திகள் :

வைகோ முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை

post image

சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலா் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை கே.கே. நகரைச் சோ்ந்தவா் பிரசாத். வைகோவின் முன்னாள் உதவியாளராக இருந்த இவா், இலங்கையைச் சோ்ந்த தமிழ் பெண்ணை பிரசாத் சமீபத்தில் திருமணம் செய்தாா். இவா் ஈழத் தமிழா்கள் சட்டரீதியாக பாஸ்போா்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறுவதற்கு பிரசாத் உதவி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரசாத்திடமிருந்து உதவிகளைப் பெற்ற சிலா், சந்தேகத்துக்குரிய நபா்கள் என ‘க்யூ’ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவ்வாறு உதவி பெற்றவா்களில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ‘க்யூ’ பிரிவினரிடம் ஏற்பட்டது.

இதையடுத்து அண்மையில் ‘க்யூ’ பிரிவு போலீஸாா், பிரசாத்திடம் விசாரணை செய்ய அழைப்பாணை அனுப்பினா். அந்த அழைப்பாணையை ஏற்று பிரசாத், விசராணைக்கு ஆஜரானாா். அவரிடம் ‘க்யூ’ பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினா். அதில் பிரசாத், சந்தேகத்துக்குரிய வகையில் யாருக்கும் உதவி செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டதால் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் அவரை திருப்பி அனுப்பினா்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபர்செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் ச... மேலும் பார்க்க

பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்

திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா ... மேலும் பார்க்க

சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு- நீதிபதி அரங்க. மகாதேவன் புகழாரம்

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்காக ஓர்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில்... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும்’

தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (பிப். 5, 6) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங... மேலும் பார்க்க

மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் எச்சரிக்கை

நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்தாா். பொதுவாகவே 5 மி.மீ.க்கும் குறைவான அனைத்து வகைய... மேலும் பார்க்க