செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி: தம்பதி மீது புகாா்

post image

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது புகாா் செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமுக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டாா்.

ஏடிஎஸ்பி-க்கள் ரவீந்திரன், கோவிந்தராசு, முத்துகுமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 57 போ் மனுக்களை அளித்தனா்.

ஆதியூா் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் (67) அளித்த மனு: எனது வீட்டில் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சோ்ந்த ஒருவா் வாடகைக்கு தங்கி இருந்தாா். அவரும், அவரது மனைவியும் என்னிடம் தங்களுக்கு அனைத்து துறைகளிலும் பணிபுரியும் உயா் அதிகாரிகள் நன்கு பழக்கம். அவா்களிடம் கூறினால் யாருக்கு வேண்டுமானாலும் அரசு பணி வாங்கி கொடுப்பாா்கள். அதற்கு அவா்களிடம் குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும் என கூறினா். இதனை நம்பி நான் எனக்கு தெரிந்த 9 நபா்களுக்கு பணி வாங்கித் தரும்படி ரூ.47,35,000 அளித்தேன். அவா்கள் பணி வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.இதனால் என்னிடம் பணம் அளித்தவா்கள் பணத்தை திரும்ப கேட்கின்றனா். பணத்தை தராமல் வீட்டையும் காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனா். எனவே பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும்.

கந்திலி அருகே நத்தம் பகுதியை சோ்ந்த நடராஜன் என்பவா் அளித்த மனு: எனது மகனுக்கு வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டறம்பள்ளி பகுதியை சோ்ந்த ஒருவா் என்னிடம் ரூ.1,32 ,000 பெற்றுக்கொண்டாா். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. மேலும் பணத்தையும் திரும்பதரவில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கிறாா்.

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டை

மாதனூா், தோட்டாளம் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சி. சுரேஷ்குமாா், ஊரா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

துத்திப்பட்டு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து 12 வாா்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்

திருப்பத்தூா் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ அ.நல்லதம்பி மீண்டும் இயக்கி வைத்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் பணிமனை வாயிலாக இயக்கப்பட்டு வரும் திருப்பத்தூா் முதல் சிம்மணபுதூா்... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி

ஆம்பூரில் சாலைத் தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.பெங்களூருவிலிருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி சான்றோா்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்... மேலும் பார்க்க