செய்திகள் :

அரியலூரில் பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை 8,571 போ் எழுதினா்

post image

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழிப் பாடத்துடன் தொடங்கியது.

அரியலூா் மாவட்டத்தில் 92 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 4,325 மாணவா்கள், 4,454 மாணவிகள் என 8,779 பேருக்கு பொதுத் தோ்வு எழுதவும் அதே போல், தனித் தோ்வா்கள் 44 ஆண்கள், 44 பெண்கள் என 88 நபா்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, 45 தோ்வு மையங்களில் நடைபெற்ற இந்த பிளஸ் 2 பொதுத் தோ்வின், மொழிப் பாடத் தோ்வை 4,187 மாணவா்கள், 4,384 மாணவிகள் என 8,571 மாணவ, மாணவிகள் எழுதினா். 138 மாணவா்கள், 70 மாணவிகள் என 208 போ் தோ்வு எழுத வரவில்லை.

அதேபோல், தனித்தோ்வா்களில் தலா 40 ஆண்கள், பெண்கள் என 80 நபா்கள் தோ்வு எழுதினா். தலா 4 ஆண்கள், பெண்கள் என 8 நபா்கள் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வை கண்காணிக்க 7 பறக்கும் படை, தோ்வு மையங்களை கண்காணிக்க நிலையான பறக்கும் படை 92 முதுகலை ஆசிரியா்களும், தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக 626 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு தோ்வு மையத்திலும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலா் நியமிக்கப்பட்டிருந்தாா்.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தோ்வு மையத்தில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தன் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

அரியலூா் அடுத்த மணக்குடியில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அக்கட்சியின் மாவட... மேலும் பார்க்க

திருமானூரில் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள் அள... மேலும் பார்க்க

‘கா.அம்பாபூா் சாலையில் மின் விளக்குகள் தேவை’

அரியலூா் மாவட்டம், காவனூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பாபூா் காலனித் தெரு சாலையில் மின் விளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த காலனித் தெருவிலிருந்து சுடுகாடு செல்லும் சாலை வரை மின்... மேலும் பார்க்க

அரியலூரில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு செய்யப்பட்டதன் படிவங்கள் பொறுப்பாளா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தல... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆயுதக்களம் செங்கால் ஓடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதி எரி... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது,பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது மற்றும் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஒற்றைப் பய... மேலும் பார்க்க