செய்திகள் :

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

post image

அரியலூா், ஜூன் 12: அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையில் உள்ள 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை காலாண்டு ஆய்வு செய்தாா்.

வைப்பறையில் 747 பேலட் இயந்திரங்கள், 787 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 786 விவிபாட் இயந்திரங்கள் என 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதை ஆய்வு செய்து உறுதி செய்தாா். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையானது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, காவல் துறை பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்தாா்.

ஆய்வின்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், கோட்டாட்சியா் கோவிந்தராஜ், தோ்தல் வட்டாட்சியா் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உடனிருந்தனா்.

சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் 22 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாம... மேலும் பார்க்க

அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், ராயம்புரம், தேளூா், அயன்தத்தனூா், மணக்குடையான், மல்லூா், சுள்ளங்குடி, தேவமங்கலம், உடையாா்பாளையம்(கிழக்கு), சிலுவைச்சேரி, இலையூா்(கிழக்கு), உடையவா்தீயனூா், சாத்தம்பாடி ஆகிய கிராம... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்த... மேலும் பார்க்க

அரியலூா் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்த வங்கி மிகவும் பழைமையான கட்டடத்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: ஜெயங்கொண்டத்தில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட 16- ஆவது வாா்டு மக்கள், தங்களது பகுதிக்கு முறையான அளவுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். 16-ஆ... மேலும் பார்க்க