"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
அரியலூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா், நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
திருமானூா் அருகேயுள்ள குருவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்குராஜன் மகன் கஜேந்திரன் (14). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த கிராம மக்கள், ஆற்றில் இறங்கி நீண்ட நேர தேடலுக்குப் பிறகு இரவு மாணவரை மீட்டு, குருவாடி அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு மாணவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தூத்தூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.