``இந்தியாவின் தேசிய மொழி எது?'' - எம்.பி கனிமொழி பதிலால் அரங்கம் அதிர கைதட்டிய க...
அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மாலை மற்றும் இரவுநேரங்களில் மிதமான இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை இரவு அரியலூா், ஜெயங்கொண்டம், திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் சற்று கனமழை பெய்தது. மழையின் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இந்த மழையானது சனிக்கிழமை காலையும் நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. அதிகாலை முதலே அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வெயில் இன்றி காணப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.