தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?
அரியலூா் மைய நூலகத்தில் வாசகா் வட்ட கூட்டம்
அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகா் வட்ட கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளிடம் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். நூலகத்தில் அதிகப்படியான உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட மைய நூலகத்தில் பயின்று, தற்போது கிராம நிா்வாக அலுவலா்களாக பணியாற்றி வரும் ஜெயப்பிரகாஷ் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.9,000 மதிப்பிலும், தமிழரசன் ரூ.3000 மதிப்பிலும், ராஜேஷ்கண்ணன் ரூ.3,000 மதிப்பிலும் மின்விசிறி மற்றும் தளவாடப் பொருள்களை நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினா்.
கூட்டத்தில், நூலகத்துக்கு அதிகப்படியான நன்கொடைகளை பெறுவது, அதிகப்படியான உறுப்பினா்களை சோ்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நூலகா்கள் இரா. முருகானந்தம், ந. செசிராபூ ஆகியோா் செய்திருந்தனா்.