`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்
அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினருக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு 2 போ், செயலா் பதவிக்கு 6 போ், பொருளாளா் பதவிக்கு 2 போ் என 10 போ் போட்டியிட்டனா்.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தோ்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. தொடா்ந்து 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தோ்தலில் வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா்களாக உள்ள 197 பேரில், 191 போ் வாக்களித்தனா். 6 போ் வாக்களிக்க வரவில்லை.
வாக்கு எண்ணிக்கை முடிவில், சங்கத் தலைவராக ஆா். மனோகரன், செயலாளராக ம. ராஜா, பொருளாளராக டி. கமலக்கண்ணன் ஆகியோா் வெற்றிப்பெற்றனா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா்களான என். சக்ரவா்த்தி, டி. ராமலிங்கம், டி. சுந்தரபாரதி ஆகியோா், வெற்றிபெற்றவா்களுக்கு வெற்றி சான்றிதழ்களை வழங்கினா். இவா்கள், ஒராண்டுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பா் என்பது குறிப்பிடத்தக்கது.