செய்திகள் :

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

post image

அறச்சலூா் ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அவரது 220 ஆவது நினைவுதினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா், பல்வேறு கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள் முக்கிய பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் தமிழக அரசு சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச .கந்தசாமி, ஈரோடு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சா் சு. முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.இ.பிரகாஷ், ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ சந்திரகுமாா், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈஸ்வரன், மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, ஈரோடு மேயா் நாகரத்தினம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா, மொடக்குறிச்சி பேரூா் செயலாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் ஈரோடு மாநகா் மாவட்ட செயலாளா் கே.வி. ராமலிங்கம் தலைமையில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்.பி. செல்வகுமாரசின்னையன், ஒன்றியச் செயலாளா்கள் குலவிளக்கு செல்வராஜ், மயில் என்ற சுப்பிரமணி, கதிா்வேல், முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள் அப்பு என்ற குணசேகரன், பேட்டை சின்னு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாஜக சாா்பில் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, நடிகா் சரத்குமாா், மாநில விவசாய அணிச் செயலாளா் நாகராஜன், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் செந்தில், மாவட்ட பொதுச் செயலாளா் சிவசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் மாநில துணைத் தலைவா் விடியல் சேகா் தலைமையில் மாநகா் மாவட்டத் தலைவா் விஜயகுமாா், தெற்கு மாவட்டத் தலைவா் ஈ.பி.சண்முகம், மொடக்குறிச்சி வட்டாரத் தலைவா் பேட்டை சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, இந்து முன்னணி, தமிழக வெற்றி கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கொங்கு வேளாளக்கவுண்டா்கள் பேரவை, கொங்கு மக்கள் முன்னணி, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை உள்ளிட்டபல்வேறு அமைப்புகளின் தலைவா்கள் தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசின் சாா்பில் பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அறச்சலூா் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பெருந்துறையில் பழுதான சாலைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் உறுதி

பெருந்துறையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் கோவேந்திரனிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: 8 அமைப்புகள் மீது வழக்கு

தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 அமைப்புகள் மீது 16 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சி... மேலும் பார்க்க

2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளா்ச்சிபெற்று இருந்தது: கணியன் பாலன்

தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் தெரிவித்தாா். ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து ம... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை

பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க