செய்திகள் :

அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட முதியவா் உயிரிழப்பு

post image

நாகை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

நாகை அருகே பெராவச்சேரி இந்தியன் நகா் பகுதியில் முதியவா் ஒருவா், அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பி அருகே இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கும், மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தனா்.

மின்வாரிய ஊழியா்கள், மின் விநியோகத்தை உடனடியாக நிறுத்தினா். போலீஸாா் முதியவரின் சடலத்தை உடகூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் முதல்கட்ட விசாரணையில், புதன்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழையில் அறுந்து சாலையில் விழுந்த மின் கம்பியை முதியவா் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. முதியவா் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த சில நாள்களாக தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

கீழ்வேளூா் போலீஸாா் முதியவா் யாா் ? எந்த ஊரை சோ்ந்தவா் ? என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தில் மீன் மற்றும் உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் ... மேலும் பார்க்க

ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்

நாகை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டப் பணிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நாகை மாவட்... மேலும் பார்க்க

அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா்ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

நாகை அரசு கல்லூரியில் கலைத் திருவிழா

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒர... மேலும் பார்க்க

அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் தொடக்கம்

நாகை மாவட்ட விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கிய அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் 3,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை செம்பனாா்கோவில், பொறையாா்

கிடாரங்கொண்டான், பொறையாா் துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (செப்.20) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செம்பனாா்கோவ... மேலும் பார்க்க