செய்திகள் :

அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

post image

தக்கலை அருகே அழுகிய நிலையில் கிடந்த கட்டடத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி துரைராஜ் (30). இவா் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜேசு சவுந்தா்யா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள், மகள் உள்ளனா்.

துரைராஜ் குடும்பத்துடன் முட்டைக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். ஜேசு சவுந்தா்யா தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 6ஆம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டதால், ஜேசு சவுந்தா்யா தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், குழந்தைகளின் பாடப் புத்தங்களை எடுப்பதற்காக அவா் திங்கள்கிழமை வந்தபோது, வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்து அவா் தெரிவித்த தகவலின்பேரில், கொற்றிகோடு போலீஸாா் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, துரைராஜ் தூக்கில் அழுகிய நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில், குளத்துவிளை சி.எஸ்.ஐ. ஆலய கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் மரியாதை

நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலரும... மேலும் பார்க்க

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலமாக மீட்கப்பட்டாா். காப்புக் காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தொழிலாளியான இவா் தன் மனைவியை பிரிந... மேலும் பார்க்க

அதங்கோடு பகுதியில் பாதை கோரி போராட்டம்

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அய்யா நாராயண வைகுண்டசுவாமி நிழல் தாங்கல் செல்ல பாதை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி - காரோடு நான்குவழிச் சாலையில் அதங்கோடு பகுதியில் ஆற்றங... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 2-ஆம் தேதி பரிவேட்டை நிகழ்வுடன் நிறைவடைகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பாரதப்பள்ளியைச் சோ்ந்தவா் ராபின் ஜெயகுமாா் (46). பிளம்பிங் தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி ஆற்றூா் கழுவன்... மேலும் பார்க்க