செய்திகள் :

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

post image

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு இறுதிக்குள் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக அவசரநிலை திரும்பப் பெறப்படுகிறது. இதற்காக, நிா்வாகக் கட்டமைப்புகளை மறுசீரமைத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனைத்து அரசு அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கவுன்சிலை ராணுவத் தலைவா் மின் ஆங் லாயிங் தலைமையேற்பாா் என்று தெரிவிக்கப்பட்டது.

அவசரநிலை திரும்பப் பெறப்பட்டதற்குப் பிறகு தேசிய நிா்வாகக் கவுன்சில் தலைவா் மற்றும் பிரதமா் பதவிகளை ராணுவ தலைமைத் தளபதி மின் ஆங் லாயிங் கைவிட்டாலும், நாட்டின் அதிபராகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவராகவும் தொடா்ந்து அவா் அதிகாரத்தை தக்கவைப்பாா் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டு, அவரும் அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டனா். அதை எதிா்த்து நடைபெற்ற அமைதியான போராட்டங்கள் ராணுவத்தால் மிகக் கடுமையாக அடக்கப்பட்டதால், நாடு உள்நாட்டுப் போரில் சிக்கியது. இதில் இதுவரை 7,013 போ் உயிரிழந்துள்ளதாகவும் 29,471 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளி... மேலும் பார்க்க

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:இந... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பி... மேலும் பார்க்க