செய்திகள் :

'அவர் எனக்கு மட்டும் சகோதரி அல்ல...' - பிரதமரின் ரோடு ஷோவிற்கு பிறகு கர்னல் சோபியாவின் தங்கை!

post image

ஆபரேஷன் சிந்தூரின் முக்கிய முகங்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி. இவர் பிறந்து, வளர்ந்த ஊர் குஜராத்தின் வதோதரா.

இன்று பிரதமர் மோடி வதோதராவில் ரோடு ஷோ மேற்கொண்டிருந்தார். அங்கே அவருக்கு பெருந்திரளான மக்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.

இந்தக் கூட்டத்தின் மத்தியில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினரும் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பிரதமர் மோடி ரோடு ஷோவில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பம்
பிரதமர் மோடி ரோடு ஷோவில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பம்

மோடியின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறித்து கர்னல் சோபியாவின் தங்கை, "பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்றது எங்களுக்கு பெருமையான தருணம் ஆகும். நமது பிரதமர் எப்போதுமே முன்னிலை வகித்து, அவர் மக்களுடன் எப்போதும் நிற்கிறார் என்கிற நம்பிக்கையைத் தருகிறார்.

பிரதமர் மோடி எங்களைக் கடக்கையில் எங்களுக்கு தலை குனிந்து வணக்கம் கூறினார். நாங்களும் பதிலுக்கு வணக்கம் கூறினோம். அந்தத் தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரது இந்தச் செய்கை, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், எதற்கும் பயப்படாதீர்கள் என்று உலகத்திற்கு கூறுவதைப் போல இருந்தது.

சோபியா நாட்டிற்காக ஏதாவது செய்யும்போது, அது எனக்கு மட்டுமல்ல... பிறருக்குமே ஊக்கமாக உள்ளது. அவர் இனி எனக்கு மட்டும் சகோதரி அல்ல... இந்த நாட்டிற்கே சகோதரி" என்று பேசியுள்ளார்.

கர்னல் சோபியா குறித்து அவரது சகோதரர் சஞ்சய் குரேஷி கூறியதாவது, "என்னுடைய சகோதரிக்கு இந்த வாய்ப்பை அளித்த இந்திய அரசிற்கும், இந்திய பாதுகாப்புப் படைக்கும் நன்றி. மற்ற பெண்களுக்காக ஒரு பெண் நடவடிக்கை மேற்கொள்வதை விட சிறந்தது எது? ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதை நமது படை எதிரிகளுக்கு காட்டியுள்ளது" என்று பேசியுள்ளார்.

`3 அடி இலையில் 13 வகை அசைவ உணவு' - திமுக பொதுக்குழு கூட்டத்தின் விருந்து | Photo Album

பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொ... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக விஜய் பேசினாரா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பொதுக்குழுவில் அதிமுக குறித்து தீர்மானம் நிறைவேற்... மேலும் பார்க்க

``தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" - சி.பி ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதை முதல் வேலையாக வைத்... மேலும் பார்க்க

`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இது... மேலும் பார்க்க

பாமக: அன்புமணி கட்சியை விட்டு நீக்கமா...? - நிறுவனர் ராமதாஸ் அளித்த பதில் என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று( ஜூன் 1) தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திய ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியி... மேலும் பார்க்க

`திமுக பின்னால் ஒளிந்து ராஜ்சபா பதவி.. நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம்' - கமல் மீது வானதி விமர்சனம்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கமல்ஹாசன் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, ராஜ்ய சபா எம்பி... மேலும் பார்க்க