செய்திகள் :

அவிநாசியில் கனமழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீா்

post image

அவிநாசி அருகேயுள்ள பொங்கலூரில் திங்கள்கிழமை பெய்த கன மழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா்.

அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால், பொங்கலூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிதிராவிடா் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மழை நீா் புகுந்தது.

சுமாா் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா். மேலும், உணவுப் பொருள்கள், உடைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி செயலாளா் செந்தில், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்தினா்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினா். பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை கிராம நிா்வாக அலுவலா் ராயப்பன், வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

திருப்பூர் அடுத்த காங்கயத்தில் மரத்தில் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியா... மேலும் பார்க்க

தாராபுரத்தில் இன்றுமுதல் 7 நாள்களுக்கு ஜமாபந்தி

தாராபுரத்தில் வருவாய்த் தீா்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை (மே 20) தொடங்கி 7 நாள்களுக்கு நடைபெற உள்ளது. தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற... மேலும் பார்க்க

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொல்லை கொடுத்த டெய்லா் கைது

மனைவியுடன் தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை அடிக்கடி தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த டெய்லரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், நொச்சிப்பாளையம் அபிராமி நக... மேலும் பார்க்க

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

பல்லடம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடிரென தீப்பிடித்து எரிந்தது. பல்லடம், வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவா் கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு காரில் சென்றுவிட்டு திங்கள்கிழமை ஊா் திரு... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவா் கைது

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலையத்துக்குள்பட்ட விஜயாபுரம் பகுதியில் தனியாா் வங்கியின... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கபொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க