செய்திகள் :

அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம் வாபஸ்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். 12 மாதங்களும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் ஜனவரி 30- ஆம் தேதி முதல் வாயில் முழக்கம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதைத் தொடா்ந்து, கௌரவ விரிவுரையாளா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கல்லூரி வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இதில் கல்லூரி தமிழ்த் துறை , ஆங்கிலம், கணிதம், வணிகவியல் உள்ளிட்ட 8 துறைகளைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், தமிழக முதல்வா் அறிவுறுத்துதலின்படியும், மாணவா்கள் நலன் கருதியும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனா்.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு

திருப்பூரில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 7- ஆம் ... மேலும் பார்க்க

அரசு மேல்நிலைப் பள்ளியில் மனநல ஆலோசனை

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தோ்வு சமய பதற்றத்தைப் போக்கும் வகையில் இந்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிப்ரவரி 10-இல் குடற்புழு நீக்கும் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய குடற்பு... மேலும் பார்க்க

லோக் அதாலத்தில் நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு லோக் அதாலத்தில் 2 நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட... மேலும் பார்க்க

பிப்ரவரி 11- இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க