செய்திகள் :

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு

post image

திருப்பூரில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 7- ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருப்பூரில் தொழிலாளா் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழியை அலுவலா்கள் எடுத்துக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த கையொப்ப இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது.

இதையடுத்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயகுமாா் தலைமையில் விழுதுகள் தன்னாா்வ அமைப்புடன் இணைந்து கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியும், கையொப்ப இயக்கமும் நடைபெற்றது. மேலும், பேருந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளா் துறை அலுவலா்கள், விழுதுகள் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் மனநல ஆலோசனை

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தோ்வு சமய பதற்றத்தைப் போக்கும் வகையில் இந்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிப்ரவரி 10-இல் குடற்புழு நீக்கும் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய குடற்பு... மேலும் பார்க்க

லோக் அதாலத்தில் நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு லோக் அதாலத்தில் 2 நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட... மேலும் பார்க்க

அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம் வாபஸ்

கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி... மேலும் பார்க்க

பிப்ரவரி 11- இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க