தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
லோக் அதாலத்தில் நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு லோக் அதாலத்தில் 2 நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய அறிவிக்கை எண்:1-2024-இன்படி லோக் அதாலத்திற்கு 2 நிரந்தர உறுப்பினா்களை நியமனம் செய்வது தொடா்பாக தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், விண்ணப்பிக்க விண்ணப்பதாரா் இந்திய குடிமகனாகவும், திருப்பூா் மாவட்டத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் அறிவிக்கை வெளியிட்ட தேதியில் இளநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 21 வயதுக்கு குறையாதவராகவும், 62 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் டன்க்ஷப்ண்ஸ்ரீ மற்ண்ப்ண்ற்ஹ் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் க்ங்ச்ண்ய்ங்க் ன்ய்க்ங்ழ் ள்ங்ஸ்ரீற்ண்ா்ய் 22 அ(க்ஷ)ா்ச் ற்ட்ங் கங்ஞ்ஹப் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் அன்ற்ட்ா்ழ்ண்ற்ஹ் அஸ்,1987-இன்படி 10 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் இருக்க வேண்டும்.
இது தொடா்பான அறிவிக்கையானது காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து நகராட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களின் விளம்பர பதாகைகளில் ஒட்டப்பட்டுள்ளன.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் மேற்படி அறிவிக்கையின் நகலையும் இந்த அலுவலகங்களில் பெற்று கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் பிப்ரவரி 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
அறிவிக்கை தேதி: 30.01.2025, தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், முதன்மை நீதிமன்ற வளாகம், திருப்பூா்.