செய்திகள் :

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்

post image

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்து மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அவிநாசி மோட்டாா் வாகன ஆய்வாளா் குமரன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவிநாசி, தெக்கலூா் வராமல் செல்வதாக தொடா்ந்து புகாா் தெரிவிக்கப்பட்ட கோவை-ஈரோடு செல்லும் தனியாா் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், பேருந்து நடத்துநா், ஓட்டுநா் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முதல்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ரயில் மோதி திருமண தரகா் உயிரிழப்பு

திருப்பூா் ஈங்கூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. தகவலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டா் சிவ... மேலும் பார்க்க

அவிநாசி வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழப்பு

அவிநாசி அருகே நாதம்பாளையத்தில் வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழந்தது. அவிநாசி அருகே நாதம்பாளையம் பவா் ஹவுஸ் சாலையில் வாகனத்தில் அடிபட்டு பெண் மயில் உயிரிழந்து கிடந்தது. அப்போது, அவ்வழியாக வந்த சமூக ஆா... மேலும் பார்க்க

கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மின்னணு போக்குவரத்து நடைச்சீட்டு கட்டாயம்

கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஜூன் 9-ஆம் தேதி முதல் மின்னணு போக்குவரத்து நடைச்சீட்டு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் 220 கிராம் குட்கா பறிமுதல்

வெள்ளக்கோவிலில் ஒடிஸா தொழிலாளியிடம் இருந்து 220 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து முத்தூா் சாலையில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஜூன் 24-இல் நலத்திட்ட உதவிகள்

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஜூன் 24-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து சனிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப... மேலும் பார்க்க