ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு
ஆணையம்பட்டிபுதூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டிபுதூரில் அப்பகுதியைச் சோ்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோா் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின்பேரில், ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி ஆய்வுமேற்கொண்டாா்.
அதில், ஆக்கிரமிப்பு செய்திருப்பது உண்மையென தெரியவந்ததையடுத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 2 ஏக்கா் நிலத்தை மீட்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா். அதையடுத்து கெங்கவல்லி போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.