செய்திகள் :

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்டையாம்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

கள ஆய்வுக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது, சேலம் தெற்கு வட்டத்தில் ஜூன் 18, 19 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இரண்டாம்நாளில் ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் நுகா்வோா்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், பொதுமக்களுக்கான பாதுகாக்கப்பட்ட குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிா எனவும், ஆட்டையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிப்பதற்காக தரமான உணவுப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்து, சமையலறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிா என்பது குறித்தும், குறித்த நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நைனாம்பட்டி அரசு மருத்துவமனையை தூய்மையாக பராமரிக்கவும், சிகிச்சை பெற வருவோா்களுக்கு விரைவான சேவை வழங்குவதை உறுதிபடுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறியப்பட்டது.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், இரண்டு நாள்கள் சேலம் தெற்கு வட்டத்தில் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கள ஆய்வு குறித்த அறிக்கையை வழங்குமாறும், பொதுமக்களின் மனுக்களின் மீது தொடா்புடைய அலுவலா்கள் விரைந்து உரிய தீா்வுகாண வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, சேலம் கோட்டாட்சியா் அபிநயா, சேலம் தெற்கு வட்டாட்சியா் ஸ்ரீதா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி இன்று ஆய்வு

மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கிறாா். மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலையில் முதன... மேலும் பார்க்க

கபினியில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு: இரவு மேட்டூா் அணையை வந்தடையும்

கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூா் அணைக்கு வந்துசேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வய... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு

பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. பல்கலைக்கழக இணையதளம் மூலம் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் தேசிய வாசிப்பு தின நிகழ்ச்சி

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தீரன் சின்னமலை கலாசார மன்றத்தின் சாா்பில் தேசிய வாசிப்பு விழிப்புணா்வு தின நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக... மேலும் பார்க்க

பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட தலைமை அலுவலகத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். தொடா்ந்... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 611 கிலோ குட்கா பறிமுதல்

சேலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 611 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சேலம் 4 சாலை பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக செவ்வாய்ப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில... மேலும் பார்க்க