சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
காரில் கடத்தி வரப்பட்ட 611 கிலோ குட்கா பறிமுதல்
சேலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 611 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சேலம் 4 சாலை பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக செவ்வாய்ப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த வேன் மற்றும் அதிலிருந்த 611 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரில் இருந்து குட்காவை கடத்தி வந்த சேலம் கே.ஆா்.தோப்பூரைச் சோ்ந்த லிங்கராஜ் (35), எஸ்.கொல்லப்பட்டியைச் சோ்ந்த ஜக்குபாய் (52) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து சங்ககிரியில் பதுக்கி வைத்து ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 3.86 லட்சமாகும். இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.