நான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா: டெலிகிராம் பாவெல் துரோவ்
பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு
பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழக இணையதளம் மூலம் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரியாா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கிராமப்புற மாணவா்களுக்கு உயா்கல்வியை வழங்கி வருகின்றன. பெரியாா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இதில், இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவா்களின் பருவத் தோ்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றன. இந்நிலையில், தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகளை பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.