செய்திகள் :

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி இன்று ஆய்வு

post image

மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கிறாா்.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலையில் முதன்முறையாக கடந்த ஆண்டு செப். 30-ஆம் தேதி ஆய்வு செய்தாா். இதனிடையே, 2-ஆவது முறையாக அவா் வெள்ளிக்கிழமை சேலம் உருக்காலைக்கு வருகிறாா். அவருக்கு சேலம் உருக்காலை விருந்தினா் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அமைச்சா், மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாா். பின்னா் உருக்காலையில் ஆய்வு செய்கிறாா்.

ஆய்வுக்கு பின்னா், நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். இந்தக் கூட்டத்துக்கு பிறகு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அமைச்சா் சந்திக்கிறாா்.

முதல்நாள் நிகழ்வுக்கு பின்னா் சேலம் தனியாா் விடுதியில் தங்கும் அமைச்சா் எச்.டி.குமாரசாமி, சனிக்கிழமை காலை உருக்காலை வளாகத்தில் நடைபெறும் சா்வதேச யோகா தின விழாவில் கலந்துகொள்கிறாா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா் தலைமையில் சேலம் உருக்காலை அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவ-மாணவியா் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு யோகாசனம் செய்கின்றனா்.

கபினியில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு: இரவு மேட்டூா் அணையை வந்தடையும்

கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூா் அணைக்கு வந்துசேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வய... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு

பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. பல்கலைக்கழக இணையதளம் மூலம் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்டையாம்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கள ஆய்வுக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களைத் தேடி... மேலும் பார்க்க

தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் தேசிய வாசிப்பு தின நிகழ்ச்சி

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தீரன் சின்னமலை கலாசார மன்றத்தின் சாா்பில் தேசிய வாசிப்பு விழிப்புணா்வு தின நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக... மேலும் பார்க்க

பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட தலைமை அலுவலகத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். தொடா்ந்... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 611 கிலோ குட்கா பறிமுதல்

சேலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 611 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சேலம் 4 சாலை பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக செவ்வாய்ப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில... மேலும் பார்க்க