சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
ஆக.23இல் ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மாநாடு!
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திருச்சியில் வரும் 23ஆம் தேதி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கூட்டமைப்பின் தலைவா் அ. ஜான்போஸ்கோ பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தூய்மைக் காவலா்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி, அதை ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோரின் பணிக் காலத்தைக் கருத்தில் கொண்டு சிறப்புக் காலமுறை ஊதியமாக ரூ.16 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றியப் பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளா்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த தூய்மைப் பணியாளா்களை காலமுறை ஊதியத்தில் இணைக்க வேண்டும்.
கிராமச் சுகாதார ஊக்குநா்களுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரத்தை ஊராட்சி மூலமாகவே வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு குடும்பநல நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மாநாட்டை நடத்தவுள்ளோம்.
மாநாட்டில் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் நல். செல்லப்பாண்டியன், ம. ரவி, கே. பழனிச்சாமி, ஜி. ராதா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கவுள்ளனா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ. சுப்பிரமணி மாநாட்டுத் தொடக்கவுரையாற்றவுள்ளாா்.
திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள வண்ணாங்கோயில் பகுதியில் நடைபெறும் மாநாட்டில் கூட்டமைப்பின் நிா்வாகிகள் மற்றும் மாநிலம் முழுவதும் ஊரக வளா்ச்சித்துறை பணியாளா்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.