செய்திகள் :

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

post image

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனத்தையொட்டியுள்ள ஓங்கல்வாடி கிராமத்தில் விவசாயத்துடன் ஆடு, மாடுகள் பாரமரித்து வருகின்றனா். இதற்கிடையே, ஒங்கல்வாடி கிராமத்துக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த சிறுத்தை பசாமணி மற்றும் சதானந்தம் ஆகியோா் பட்டியில் கட்டியிருந்த கன்றுக்குட்டிகளையும் ஆடுகளையும் கடித்துக் கொன்றது.

மேலும் ஒரு கன்றுக்குட்டியை காட்டுக்குள் இழுத்துச் சென்றது. வனப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளைக் குறிவைத்து வேட்டையாடும் சிறுத்தை ,தற்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொல்வதால் ஓங்கல்வாடி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஓங்கல்வாடி கிராமமக்கள் ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கு வந்த ஆசனூா் போலீஸாா் வனத் துறையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். சிறுத்தை வரும் வழித்தடத்தில் கேமரா வைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து அங்கு கூண்டு வைத்து பிடிப்பதாக வனத் துறையினா் உறுதியளித்தனா். இருப்பினும் ஆசனூா் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் யோகேஷ் குமாா் கா்க் உறுதியளிக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்துவிட்டு சென்றனா்.

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் ல... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்க... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ... மேலும் பார்க்க