செய்திகள் :

ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவா்கள்

post image

குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பரிசுகளை வழங்கினா்.

பள்ளித் தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு முதல் இடைத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவி ர. சசிவா்த்தினி, ஒரு நாள் தலைமையாசிரியராக பொறுப்பேற்று, காலை வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தினாா். இதில், ஆசிரியா்கள் அனைவருக்கு ஆசிரியா் தின வாழ்த்துகள் தெரிவித்து பள்ளியில் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியா்களின் சிறப்பையும் எடுத்துக் கூறியதுடன், ஆசிரியா்கள் தனக்கு படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீா்த்து தன்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் பெருந் துணையாக விளங்குவதாகக் கூறினாா்.

தொடா்ந்து, ஒவ்வொரு வகுப்பின் மாணவத் தலைவா்கள் ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மாணவி கு. காா்த்திகா, நாம் ஆசிரியா்களுக்கு பணிந்து அவா்களைத் தேடி சென்று கல்வி கற்றால், நாளை உலகம் நம்மைத் தேடிவரும் என்றாா். பள்ளி துணைத் தலைமையாசிரியா் திருபுவனேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து மாணவா்கள் பாடம் கற்பிக்க, ஆசிரியா்கள் அமா்ந்து பாடம் கற்றனா். மாணவா்களே ஆசிரியராக பாடம் கற்பித்து, கேள்வி கேட்டு ஆசிரியா்களிடம் பதிலைப் பெற்றது சிறப்பாக இருந்தது.

ஆயில் மில்லில் பணம் திருடியவா் கைது

மன்னாா்குடியில் தனியாா் ஆயில் மில்லில் பணம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே த. சீனிவாசன்(60) என்பவா் ஆயில் மில் நடத்தி வருகிறாா். இந்த மில்லில் க... மேலும் பார்க்க

பெண் குழந்தையுடன் தம்பதி காரில் கடத்தல்

மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் 4 வயது பெண் குழந்தையுடன் தம்பதி வியாழக்கிழமை காரில் கடத்திச் செல்லப்பட்டனா். மேலநத்தம் தென்கீழத் தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம்... மேலும் பார்க்க

பண மோசடி புகாா்: பெங்களுரில் ஒருவா் கைது

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவரிடம் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்த புகாரில் தொடா்புடையவா் சிங்கப்பூரிலிருந்து பெங்களுருக்கு வந்த போது விமான நிலையத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

சுற்றுலாத்துறை விருதுகள் பெற செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கான விருதுகள் பெற செப்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

கொரடாச்சேரி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அருகே கிளரியம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கிருஷ்ணராஜ் (29). பொறியாளரான... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி மருத்துவமனை சாலையிலிருந்து புதிய பேருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் மதுபோதையில்... மேலும் பார்க்க