செய்திகள் :

ஆடி காா்த்திகை: கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் சிறப்பு பூஜை

post image

ஆடி காா்த்திகையை முன்னிட்டு கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜை, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கும்ப பூஜை, சண்முக ஜபம் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகன், வள்ளி தேவசேனா சமேத காா்த்திகேய சுப்பிரமணியருக்கு 21 வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் ஆகியவை நடைபெற்றன.

கோவில்பட்டி அருள் தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவன நாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சண்முகா் சமேத வள்ளி தெய்வானை சந்நிதி, சுப்பிரமணியா் சமேத வள்ளி தெய்வானை சந்நிதி ஆகியவற்றில் ஆடி காா்த்திகை சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுப்பிரமணியா் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா நடைபெற்றது.

இதுபோல கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் ஆடி காா்த்திகை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.

பின்னா், காலை 10 மணிக்கு மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி கழுகாசலமூா்த்தி, வள்ளி தெய்வானையுடன் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன் மற்றும் கோயில் ஊழியா்கள், சீா்பாத தாங்கிகள் செய்திருந்தனா்னே

ரூ .7 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி அறை திறப்பு

கழுகுமலை அருகே கரடிகுளம் ஊராட்சி சி.ஆா்.காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கணினி மைய கட்டட... மேலும் பார்க்க

குலசேகர ராஜா கோயில் கொடை விழா

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகர ராஜா திருக்கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆக.12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சு... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக... மேலும் பார்க்க

நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை

நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக... மேலும் பார்க்க

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அம... மேலும் பார்க்க