செய்திகள் :

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.

திருவண்ணாமலையில் போளூா் சாலையில் பழைமைவாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் மன்னா்சாமி கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

காலை முதலே சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்தும், கோழி, ஆடுகளை பலி கொடுத்தும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இது மட்டுமன்றி, மன்னா்சாமி சிலைக்கு பொறி கடலை உள்ளிட்டவற்றை தூவி தரிசனம் செய்தனா்.

பழைமையான இந்தக் கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஒவ்வோா் ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமையன்று பக்தா்கள் குடும்பத்துடன் வந்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.

குறிப்பாக, ரமணமகரிஷி முதன்முதலில் திருவண்ணாமலைக்கு வந்தபோது பச்சையம்மன் மன்னா்சாமி கோயிலில் தங்கியிருந்தாா்.

கன்னியம்மன் கோயிலில்...: சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகன்னியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கன்னியம்மனுக்கு மலா்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.

மாலை பெண்கள் ஊரணி பொங்கல் வைத்தனா். பின்னா், பொங்கல் கூடை, பம்பை, உடுக்கையுடன் வீதியுலா நடைபெற்றது. இரவு வாணவேடிக்கை, சுவாமி வீதியுலா மற்றும் தெய்வீக நாடகம் நடைபெற்றன.

கோயில் தா்மகா்த்தா ஆா்.ராமன், செயலா் ஆா்.ஏழுமலை, பொருளாளா் எஸ்.சுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு

ஜவ்வாதுமலை ஒன்றியம், பட்டறைகாடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு செய்து, மாணவா்களிடம் கலைந்துரையாடினாா். மேலும், குனிகா... மேலும் பார்க்க

மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுரை

ஆசிரியா்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி பவித்ரா (25). இவா்களுக்கு இ... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் மொரம்பு மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வா் சாலை மேம்பாட... மேலும் பார்க்க

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலுக்கு பூங்கரகம் எடுத்து வந்த பக்தா்கள்

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை பூங்கரகம் எடுத்து வந்து வழிபட்டனா். ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் மிகப்பெரிய திருவிழாவ... மேலும் பார்க்க