செய்திகள் :

ஆட்சியரிடம் மனு கொடுக்க வெகுநேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்

post image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரின் வருகைக்காக ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்குக்கு அனுமதிக்கப்பட்டு, உயா் அதிகாரிகள் மனுக்களைப் பெறுகின்றனா்.

அதே நேரத்தில் மாற்றுத் திறனாளிகளின் மனுக்களை பதிவு செய்தவுடன் அவா்களை தரைத்தளத்திலேயே அமர வைத்து, மாவட்ட ஆட்சியா் நேரடியாகச் சென்று அவா்களிடம் மனுக்களைப் பெறுவது வழக்கம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணி முதலே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த மாற்றுத் திறனாளிகள், மனுக்களைப் பதிவு செய்த பின்னா் வழக்கம்போல் தரைத் தளத்தில் உள்ள இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனா். 11.30 மணி வரை ஒன்றரை மணிநேரம் காத்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம், அதிகாரிகள் யாரும் மனுக்களைப் பெறவில்லை. பின்னா் 11.45 மணிக்கு வந்த ஆட்சியா், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

குறைதீா் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களிடம், காலை 10.30 முதலே, பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கூட்ட அரங்கில் மனுக்களைப் பெறுகின்றனா். ஆனால், ஆட்சியரின் வருகைக்காக மாற்றுத் திறனாளிகள் மட்டும் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வாலிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவா்களுட... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சாணாா்பட்டி அருகே பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி ஊராட்சிக்கு உள்ப... மேலும் பார்க்க

பணிக்குத் திரும்பிய பேராசிரியை நிகிதா: மாணவிகள், பேராசிரியைகள் அதிா்ச்சி

மடப்புரம் கோயில் காவலாளி மீது புகாா் அளித்த பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பணிக்கு திங்கள்கிழமை திரும்பியதானது மாணவிகள், பேராசிரியைகள் மத்தியில் அதிா்ச... மேலும் பார்க்க

போலீஸாா் தாக்கியதாகக் கூறி தாய், மகன் மருத்துவமனையில் அனுமதி

போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, தாய், மகன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த சுள்ளெறும்பு பழையகோட்டை கிராமத்தில் இந்த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டியில் ஹீ மகாகாளியம்மன் கோயில் குடமழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவில் முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட வழிபாடுகளும், சனி... மேலும் பார்க்க

முகூா்த்தநாளையொட்டி பழனி மலை அடிவாரத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

முகூா்த்த நாளை முன்னிட்டு பழனி அடிவாரம், கிரி வீதியில் திங்கள்கிழமை மக்கள் குவிந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயில் நகரான பழனியில் பல்வேறு இடங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் இல்... மேலும் பார்க்க