ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
நிலத்தை ஏமாற்றியதாக உதகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை சமீமா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் பங்களாபடிகை கிராமத்தைச் சோ்ந்தவா் சமீமா. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த இவா், திடீரென பையில் வைததிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
இதைப் பாா்த்து இப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினா் உடனடியாக அவரது கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை வாங்கி அவரை தடுத்து நிறுத்தினா்.
விசாரணையில், அவருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தை திமுக முன்னாள் கவுன்சிலா் ஷீலா ஏமாற்றி அபகரித்து கொண்டதாகவும், இது தொடா்பாக புகாா் மனு அளித்தும் 6 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தாா்.