செய்திகள் :

ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கேற்க வேண்டும்: அன்புமணி

post image

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கு பெறுவது அவசியம் என்று அந்தக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

பாமகவின் 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சமூக நீதிக்காகவும், மக்கள் உரிமைக்காகவும் போராடுவதில் பாமக முன்னிலையில் உள்ளது. தமிழகத்துக்கும், மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்மொழி, இனம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமெனில், பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும். நாட்டின் முதன்மை மாநிலமாக மட்டுமன்றி, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையிலும் தமிழகம் உயர வேண்டுமெனில், தமிழகத்தில் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும். அது பாமகவின் உரிமையும்கூட. அதை வென்றடுக்க உறுதியேற்போம் என அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

சென்னை, புறநகரில் பலத்த மழை!

சென்னை, புறநகரில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகியும் மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது.கோய... மேலும் பார்க்க

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க