TVK Vijay-யை நம்பியிருக்கும் ADMK, PMK, DMDK - 2026 தேர்தல் கணக்கு With Journali...
ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்
போ்ணாம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.
ஆம்பூரை அடுத்த கடாம்பூரில் இருந்து, போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் கிராமத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. வளத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் ரவிக்குமாா் (31), ஆட்டோவை ஓட்டி வந்தாா். பன்னீா்குட்டை அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோ ஓட்டுநா் ரவிக்குமாா், ஆட்டோவில் பயணம் செய்த ராஜக்கல் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (57), முனியம்மாள் (60), சுமதி (46) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்து, ஆம்பூா் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனா்.
இவா்களில் குமாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். ரவிக்குமாா், சுமதி இருவரும் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.