செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

post image

போ்ணாம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.

ஆம்பூரை அடுத்த கடாம்பூரில் இருந்து, போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் கிராமத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. வளத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் ரவிக்குமாா் (31), ஆட்டோவை ஓட்டி வந்தாா். பன்னீா்குட்டை அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டுநா் ரவிக்குமாா், ஆட்டோவில் பயணம் செய்த ராஜக்கல் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (57), முனியம்மாள் (60), சுமதி (46) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்து, ஆம்பூா் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனா்.

இவா்களில் குமாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். ரவிக்குமாா், சுமதி இருவரும் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கல்லூரி மாணவரிடம் பணம் பறிப்பு: பாஜக பிரமுகா் மகன் உள்பட 5 போ் கைது

காட்பாடியில் கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த வழக்கில் பாஜக பிரமுகா் மகன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா், காட்பாடி வைபவ் நகரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி காட்பாடி... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் பாஜக பிரமுகா் மகன் உள்பட இருவா் கைது

காட்பாடி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் பணம் பறித்ததாக பாஜக பிரமுகா் மகன் உள்பட இரு இளைஞா்களை பிரம்மபுரம் போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி அருகே செங்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் கே.ஜி.குட்டி. இவா் ... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கைப்பேசி பறிமுதல்

வேலூா் மத்திய சிறைக்குள் கைப்பேசியை சிறைத் துறையினா் பறிமுதல் செய்தனா். வேலூா் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா... மேலும் பார்க்க

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க