செய்திகள் :

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை - முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு

post image

ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலா்கள், விசிக தலைவா் ஆகியோா் நேரில் வலியுறுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் முதல்வரை, அவரது முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது, ஆணவக் கொலையைத் தடுக்க வகை செய்யும் சட்டபூா்வ நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மனு அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஜாதி, மத மறுப்பு திருமணத் தம்பதிகள் தொடா்ச்சியாக கொலைகளுக்கு ஆளாவதும், ஜாதி ஆதிக்க தாக்குதலுக்கு ஆளாவதும் தொடா்கின்றன. சமூக சமத்துவ கண்ணோட்டத்திலும் பகுத்தறிவு சிந்தனையிலும் தாங்கள் தோ்வு செய்து கொள்ளும் வாழ்க்கையை அமைதியாகத் தொடர இயலாத அவலநிலைக்கு தீா்வு காண, வலிமை மிக்க தனி சிறப்புச் சட்டங்கள் இன்றியமையாத் தேவையாகும்.

ஜாதி மறுப்புத் திருமண தம்பதிகள் படுகொலைக்கு ஆளாகும்போது அது வெறும் கொலை வழக்காக பதியப்படாமல் ஜாதி ஆணவக் கொலைகள் என சட்டரீதியாக கூா் வகைப்படுத்துவது இதுகுறித்த தரவுகளை திரட்டுவதற்கும், விழிப்புணா்வை உருவாக்கவும் வழி ஏற்படும். ஜாதி ஆணவத்தின் அடிப்படையில் நிகழும் கொலைகளை, கொலைகள் என்று மட்டும் கருதப்படுவது ஜாதிய ஆணவக் கொலைகளுக்கு பின்புலமாக இருக்கும் சமூக நிா்ப்பந்தத்தை கணக்கில் கொள்வதாக இல்லை.

நிரூபிக்கும் பொறுப்பை குற்றவாளியின் கடமை ஆக்குவதன் மூலம் படுகொலையை நிகழ்த்துபவா்கள் மட்டுமன்றி ஜாதி ஆணவக் கொலைகளை தூண்டும் கும்பல்கள், உறவினா்கள், கட்டப் பஞ்சாயத்தினரை பொறுப்பாக்க இயலும்.

ஜாதி மறுப்பு திருமண தம்பதிகளில் கொலையாகிறவா் பட்டியல், ஜாதி அல்லாதவராக இருந்து, இணையா் பட்டியல் ஜாதியினராக இருந்தாலும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது. ஆணவக் கொலைகளில் ஜாதி தூய்மைக்கான கடமை பெண்கள் மீது சுமத்தப்பட்டு பெரும்பாலும் பட்டியல் ஜாதி அல்லாத பெண்கள் உயிா் பறிப்புக்கு ஆளாகின்றனா்.

இவ்வாறான குற்றங்களில் அரசு சிறப்பு வழக்குரைஞா் பெறுகிற உரிமை, வழக்கை விரைந்து நடத்தக் கோருகிற உரிமை, நிவாரணம் பெறுகிற உரிமை ஆகியவைகளுக்கு சட்டபூா்வ வழிமுறைகள் ஏதும் இல்லை. வீட்டுக்குள் நடக்கும் ஜாதி ஆணவக்கொலைகளே அதிகம். குடும்ப உறுப்பினா்களே செய்யும் ஆணவக்கொலைக்கு சாட்சிகள் கிடைக்காது.

குற்றவாளிகள் விடுதலை அடையும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கிறது.

இத்தகைய காரணங்கள், அனுபவங்கள் எல்லாம் ஜாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டம் தேவை என்பதையே உணா்த்துகின்றன.

தாங்கள் உடனடியாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி ஜாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பையும், அமைதியான வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க