செய்திகள் :

ஆணவப் படுகொலை: கவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் - அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

post image

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் குமாரும், திருநெல்வேலியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகளும் காதலித்து வந்த நிலையில், அவரின் சகோதரர் சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கவினை ஆணவப் படுகொலை செய்தார்.

இந்த விவகாரத்தில், சுர்ஜித் கைதுசெய்யபட்டதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரின் பெற்றோரும் கைதுசெய்யப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்திய கவினின் பெற்றோர், நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து தனது மகனின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

கவின் குமார்
கவின் குமார்

அதைத்தொடர்ந்து, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.

அதேசமயம், எஃப்.ஐ.ஆரில் சுர்ஜித் மற்றும் அவரின் பெற்றோரின் பெயர் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் கிருஷ்ணவேணி கைதுசெய்யப்படவில்லை.

இதற்கிடையில், தானும் கவினும் உண்மையாகக் காதலித்ததாகவும், தன்னுடைய அப்பா அம்மாவுக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் திடீரென வீடியோ வெளியிட்டார் அப்பெண்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் இன்று (ஆகஸ்ட் 1) காலையில் ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்ட கவினின் உடல், பிற்பகல் 12 மணியளவில் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கவின் உடலுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைச்சர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

MP: காணாமல் போன 23,000 பெண்கள்; 1,500 குற்றவாளிகள் தலைமறைவு - அதிர்ச்சி தகவல்கள்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட... மேலும் பார்க்க

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ... மேலும் பார்க்க