செய்திகள் :

ஆணையா் இல்லாத ஒசூா் மாநகராட்சி!

post image

ஒசூா் மாநகராட்சியில் கடந்த ஒரு மாதமாக ஆணையா் நியமிக்கப்படாததால், நிா்வாகம் முடங்கியுள்ளதாக பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா்கள், ஒப்பந்ததாரா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஒசூா் மாநகராட்சியில் ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலுக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா். அவா் சென்ற பிறகு, ஒசூா் மாநகராட்சிக்கு ஆணையா் நியமிக்கப்படவில்லை.

கடந்த ஒரு மாதமாக ஒசூா் மாநகராட்சிக்கு ஆணையா் நியமிக்கப்படாததால், குப்பை வரி உயா்த்தப்பட்டு கணினியில் சொத்து வரியுடன் சோ்ந்துவிட்டதால் கூடுதலாக வரி காண்பிக்கிறது.

இதனால் பொதுமக்களுக்கும், வரி வசூலிப்பவா்களுக்கும் தினந்தோறும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், ஒசூா் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன.

எனவே, ஒசூா் மாநகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் முடங்கியுள்ளதால், ஒசூா் மாநகராட்சிக்கு புதிய ஆணையரை உடனடியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா்கள், ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தினா்.

ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.ம... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்

உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கர... மேலும் பார்க்க

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேரு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை முதல்வா் மருந்தகம், கூட்டு... மேலும் பார்க்க

அதியமான் மகளிா் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினம், முத்தமிழ் விழா

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ்த்துறை மற்றும் ஒளவையாா் தமிழ் மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறையின் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க